Sunday, January 17, 2010

ஆஸ்ட்ரேலியாவில் மேலும் ஒரு இந்திய டாக்சி ஓட்டுனர் தாக்கப்பட்டார்

ஆஸ்ட்ரேலியாவில் மேலும் ஒரு இந்திய டாக்சி ஓட்டுனர், அவருடைய டாக்சியில் பயணம் செய்த ஆஸ்ட்ரேலியவினரால் தாக்கப்பட்டுள்ளார்.

விக்டோரியா மாநிலத்திலுள்ள பல்லாராட் நகரில் நேற்று நள்ளிரவு இத்தாக்குதல் நடந்துள்ளதென அம்மாகாண காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்திய ஓட்டுனரின் டாக்சியில் வந்த 4 ஆஸ்ட்ரேலியர்களும் அவரை கேவலமாக திட்டியுள்ளதாகவும், அதில் ஒருவன் அவர் மீது எச்சில் உமிழ்ந்ததாகவும், பிறகு ஒன்றுசேர்ந்து தாக்கியதாகவும் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதென காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தாக்கப்பட்ட இந்திய ஓட்டுனரின் முகம் வீங்கியிருந்ததாகவும், உடலில் பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ள காவல் துறையினர், இத்தாக்குதலிற்கு இனவெறி காரணம் இல்லையென்று கூறியுள்ளனர்.

இந்திய டாக்சி ஓட்டுனர் ஒருவர் நேற்றும் இதேபோல் ஒரு கும்பலால் தாக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source:webdunia

No comments:

Post a Comment