Thursday, January 28, 2010

வசூலில் டைட்டானிக்கை 'மூழ்கடித்த' அவதார்!!

டைட்டானிக் திரைப்படத்தின் 12 ஆண்டுகால வசூல் சாதனையை 6 வாரங்களில் முறியடித்துள்ளது ஜேம்ஸ் கேமரூனின் அவதார்.

1997-ம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூனின் இயக்கத்தில் வெளியான படம் டைட்டானிக். உலகக் காதலர்களின் ஒப்பற்ற திரைக்காவியமாகப் பார்க்கப்பட்ட இந்தப் படம் வசூலிலும் விருதுக் குவிப்பிலும் இணையற்ற சாதனைகளைப் படைத்தது.

1,843.2 மில்லியன் (1.8432 பில்லியன்) டாலர்களைக் குவித்து வசூலில் உலகிலேயே நம்பர் ஒன் படமாகத் திகழ்ந்தது. 11 ஆஸ்கர் விருதுகள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட விருதுகளையும் வென்றது டைட்டானிக்.

இந்த 12 ஆண்டுகளில் டைட்டானிக்கின் வசூல் சாதனையை வேறு எந்தப் படத்தாலும் முறியடிக்க முடியாமல் இருந்தது. அந்த சாதனையை மீண்டும் ஜேம்ஸ் கேமரூனே இப்போது முறியடித்துள்ளார்.

அவரது அவதார் திரைப்படம் கடந்த டிசம்பர் 18-ம் தேதி உலகமெங்கும் வெளியானது. திரைப்பட வரலாற்றையே புரட்டிப் போட்டுள்ளது இந்தப் படத்தின் வசூல் சாதனை. இந்தியா உள்பட திரையிட்ட நாடுகளிலெல்லாம் இந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்தப் படம் நிச்சயம் டைட்டானிக் வசூலை மிஞ்சிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இத்தனை சீக்கிரம் அந்த சாதனை நிகழும் என யாருமே எதிர்பார்க்கவில்லை.

வெளியான 6 வாரங்களுக்குள் டைட்டானிக் 12 ஆண்டு வசூல் சாதனையை முறியடித்துள்ளது அவதார்.

6 வது வார நிலவரப்படி, அவதார் பெற்றுள்ள வசூல் 1,858.6 மில்லியன் டாலர்கள் (1.8586 பில்லியன் டாலர்).

விருதுகளை வெல்வதிலும் டைட்டானிக்கை இந்தப் படம் மிஞ்சி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே ஆஸ்கருக்கு அடுத்த நிலையில் உள்ள கோல்டன் குளோப் விருதுகளில் சிறந்த படம், சிறந்த இயக்குநர் விருதுகளை வென்றுள்ள அவதார், 10க்கும் மேற்பட்ட பிரிவுகளில் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Source:thatstamil.in

இன்று ரம்பாவுக்கு நிச்சயதார்த்தம்

நடிகை ரம்பாவுக்கும் கனடா தொழிலதிபர் இந்திரனுக்கும் இன்று திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது.

சென்னையில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இந்த நிச்சயதார்த்தம் நடக்கிறது.

சர்க்கம் என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானவர், ரம்பா.

சுந்தர புருஷன், உள்ளத்தை அள்ளித்தா, அருணாசலம், நினைத்தேன் வந்தாய் உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்து பெரிய ரவுண்டு வந்தார்.

சொந்தப் படம் எடுத்து நஷ்டம் கண்ட அவர், பின்னர் போஜ்புரி படங்களில் நடித்தார்.

இப்போது மீண்டும் தமிழில் சில படங்களில் நடிக்கிறார்.

இந் நிலையில் கனடா நாட்டு நிறுவனம் ஒன்றின் விளம்பரத் தூதராக ஒப்பந்தமான ரம்பா, அந்த நிறுவன அதிபரையே திருமணம் செய்கிறார்.

அந்த தொழிலதிபர் பெயர் இந்திரன். இவர்கள் திருமணம், சென்னையில் வருகிற ஏப்ரல் மாதம் நடக்கிறது.

அதற்கு முன்னதாக திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி, சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில், இன்று மாலை 6 மணிக்கு நடக்கிறது.

Source:thatstamil.in

மீண்டும் வேலைக்கு ஆள் சேர்க்கும் சத்யம்!

மும்பை: மகிந்திரா சத்யம் நிறுவனம் 2000 புதிய பணியாளர்களை பணி நியமனம் செய்யப் போவதாக அறிவித்துள்ளது. புதியவர்கள் மற்றும் அனுபவமிக்கவர்களின் கலவையாக இந்த நியமனம் அமையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை வேலைக்குறைப்புக்கு வழிபார்த்துக் கொண்டிருந்த மகிந்திரா சத்யம் இப்போது புதிய ஆட்களை நியமிப்பது குறித்துப் பேசத் துவங்கிவிட்டது. காரணம், மீட்சிப் பாதையில் செல்லத் துவங்கியுள்ளதாம் இந்த நிறுவனம்.

"நிலைமை முன்பு போல மோசமாக இல்லை. வர்த்தகம் நல்ல நிலைக்குத் திரும்பத் துவங்கிவிட்டது. எதிர்காலம் தெளிவாகத் தெரிகிறது. எனவே இப்போது வருகிற வேலைக்கான ஆர்டர்களைச் சமாளிக்க புதிய பணியாளர் நியமனம் அவசியம். இதை இனியும் தள்ளிப் போடாமல் இப்போதே பணி நியமனங்களைச் செய்யப் போகிறோம்" என்கிறார் மகிந்திரா நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர்.

அடுத்த நிதியாண்டிலிருந்து கேம்பஸ் இன்டர்வியூவையும் மீண்டும் தொடங்கப் போவதாக சத்யம் அறிவித்துள்ளது.

ஏற்கெனவே 2008ம் ஆண்டு கேம்பஸ் இன்டர்வியூ மூலம் பலரை தேர்வு செய்தது சத்யம் நிறுவனம். ஆனால் நிதி நெருக்கடி காரணமாக, தாங்கள் அளித்த வேலைவாய்ப்புக் கடிதங்களை அப்படியே விட்டுவிட்டது. இவர்களுக்கு மீண்டும் பணிநியமனம் வழங்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார் அந்த உயர் அதிகாரி.

இந்நிலையில் சமீபத்தில் 6000 மாணவர்களுக்கு தேர்வு வைத்து, அவர்களில் 3000 பேரைத் தேர்வு செய்து வைத்துள்ளது சத்யம். இவர்களை 50 பேர் கொண்ட குழுக்களாக தேர்வு எழுத வைத்து, தேவையானவர்களை இறுதிப் பட்டியலில் இடம் பெறச் செய்யும் திட்டம் உள்ளதாம்.

Source:thatstamil.in

ராஜபக்சேவை குடும்பத்துடன் கொல்லத் திட்டமிட்டிருந்தார் பொன்சேகா-இலங்கை அரசு பரபரப்பு புகார்

கொழும்பு: ராஜபக்சேவையும், அவரது குடும்பத்தினரையும் கூண்டோடு படுகொலை செய்ய திட்டமிட்டிருந்தார் சரத் பொன்சேகா என்று இங்கை பாதுகாப்பு அமைச்சகம் பரபரப்பு புகாரைத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் வரும் அரசின் தேசிய பாதுகாப்புக்கான மீடியா மையத்தின் இயக்குநர் லட்சுமண் ஹலுகலே இன்று மாலை செய்தியாளர்கள் கூட்டத்தைக் கூட்டி தெரிவித்தார்.

அப்போது அவர் கூறுகையில், அதிபரையும், அவரது குடும்பத்தினரையும் கூண்டோடு தீர்த்துக் கட்ட முன்னாள் ராணுவத் தலைமைத் தளபதி பொன்சேகா திட்டமிட்டிருந்தார். இந்த சதித் திட்டத்தை கொழும்பில் உள்ள இரண்டு ஹோட்டல்களில் வைத்துத் தீட்டியுள்ளனர். இதுதொடர்பான ஆதாரங்கள் எங்களுக்குக் கிடைத்துள்ளன.

கோட்டையில் உள்ள, லேக் ஹவுஸ் சந்திப்பு அல்லது கொழும்பு காலே சாலை ஆகியவற்றில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்து அதிபரைக் கொல்ல திட்டம் தீட்டப்பட்டிருந்தது.

இந்த சதித் திட்டத்தில் ராணுவத்தை விட்டு ஓடிப் போன 9 அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளது. இவர்களைத்தான் நேற்று ராணுவத்தினர், பொன்சேகா தங்கியிருந்த ஹோட்டலில் வைத்துக் கைது செய்தனர்.

இந்த பயங்கர சதித் திட்டம் தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது. இதில் சம்பந்தப்பட்டுள்ள அனைவரும் கைது செய்யப்படுவர் என்றார் ஹலுகலே.

ராஜபக்சே தன்னைக் கொலை செய்ய உத்தரவிட்டுள்ளதாக நேற்று காலையில்தான பொன்சேகா கூறியிருந்தார். இந்த நிலையில் இன்று மாலை, பொன்சேகாதான், ராஜபக்சேவை கூண்டோடு கொல்லத் திட்டமிட்டிருந்ததாக அரசுத் தரப்பு குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்து என்ன நடக்குமோ என்ற பேரச்சம் இப்போது இலங்கையை படு வேகமாக சூழ்ந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

விரைவில் இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு?:

இந் நிலையில் விரைவில் நாடாளுமன்றத்தைக் கலைத்து அதிபர் ராஜபக்சே உத்தரவிடுவார் என்று இலங்கை அமைச்சர் மைத்ரிபாலா சிறீசேனா தெரிவித்துள்ளார்.

அதிபர் தேர்தலில் பெரும் வெற்றி பெற்றுள்ள சூட்டோடு, நாடாளுமன்றத் தேர்தலையும் நடத்தி எதிர்க்கட்சிகளை கூண்டோடு காலி செய்து விடும் முகமாகவே நாடாளுமன்றத்தை விரைவில் கலைக்க ராஜபக்சே திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து அமைச்சர் சிறீசேனா கூறுகையில், விரைவில் நாடாளுமன்றம் கலைக்கப்படும். இதுதொடர்பான அறிவிப்பை அதிபர் விரைவில் வெளியிடுவார். தேர்தல் தேதி குறித்து இப்போது முடிவாகவில்லை என்றார்.

நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க ராஜபக்சேவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியும் தயாராகி விட்டது. இதுகுறித்து கூட்டணியின் பொதுச் செயலாளரான சுசில் பிரேமஜெயந்தா கூறுகையில், கட்சியின் சார்பிலான வேட்பு மனுக்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. அடுத்த சில வாரங்களில் இந்தப் பணிகள் முடிவடையும் என்றார்.

சுற்றுச்சூழல்துறை அமைச்சர் படாலி ரணவக்க கூறுகையில், நாடாளுமன்றத்தின் ஆயுள்காலம் நீட்டிக்கப்பட மாட்டாது. அப்படி ஒரு திட்டம் அரசிடம் இல்லை என்றார்.

நாடாளுமன்றத்தின் ஆயுள்காலம் ஏப்ரலுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த சில நாட்களில் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான நடைமுறைகளை அரசு தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Source:thatstamil.in

Sunday, January 17, 2010

பிப்ரவரியில் ‘அசல்’

பொங்கல் ஆர்ப்பாட்டங்கள் அடங்கிய பிறகு ‘அசல்’ படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறது சிவாஜி பிலிம்ஸ். ரிலீஸ் தேதி பிப்ரவரியில் இருக்கலாம்.

சரண், அஜீத் காம்பினேஷன் விநியோகஸ்தர்களுக்கு பிடித்தமான கூட்டணி. இதுவரை இந்த கூட்டணி தோல்வியைத் தழுவியதில்லை என்பது முக்கியமானது.

‘அசல்’ படத்தின் ஒட்டுமொத்த விநியோக உரிமையை வாங்க பலருக்கும் ஆசை. சன் தொலைக்காட்சியும் அதில் ஒன்று. ஆனால் பிடிவாதமாக மறுத்திருக்கிறார்கள் சிவாஜியின் புத்திரர்கள். நல்ல விளைச்சலுக்கான அறுவடையை யாருக்கோ விட்டுத் தர வேண்டுமா என்ன?

அஜித்தின் ‘பில்லா’ படம்தான் அவர் நடித்தப் படங்களிலேயே அதிக திரையரங்குகளில் வெளியான படம். அதனை ‘அசல்’ முந்தும் என்கின்றன செய்திகள். ஏறக்குறைய 500 பிரிண்ட்கள். நிஜமாகவே அல்டிமேட் ஸ்டார்தான்.

Source:webdunia

ஆயிரத்தில் ஒருவன்

ஆயிரக்கணக்கானவர்களின் 3 ஆண்டு உழைப்பில் 32 கோடி ரூபாய் செலவில் செல்வராகவன் உருவாகியிருக்கும் படம். ஆதிவாசிகள், நீண்ட பாலைவனப் பயணம், சோழர் பரம்பரை, போர் என்று இதுவரை தமிழ் சினிமா தொட்டிராத விஷயங்கள். ஓபனிங் எல்லாம் சரிதான், ஆனால் ஃபினிஷிங்...?

பதிமூன்றாம் நூற்றாண்டில் சோழர்களுக்கும், பாண்டியர்களுக்கும் நடக்கும் போரில் சோழன் தோற்கடிக்கப்படுகிறான். பாண்டியர்களுக்கு தேவை சோழர்களிடம் இருக்கும் பாண்டியர்களின் குலதெய்வ சிலை. சோழனோ அந்த சிலையை தனது மகனிடம் கொடுத்து சில வீரர்களுடன் பாண்டியர்கள் கையில் சிக்காமல் தப்ப வைக்கிறான். வியட்நாம் நாட்டிற்கு அருகில் இருக்கும் பெயர் தெரியாத தீவுக்கு தப்பிச் செல்கிறான் சோழ இளவரசன்.

அவனை கண்டுபிடித்து தங்களது குலதெய்வ சிலையை மீட்டுவர பாண்டியர்கள் எடுக்கும் முயற்சிகள் பலனளிக்கவில்லை. சோழ இளவரசன் இருக்கும் இடமே அவர்களுக்கு தெரியவில்லை. அவன் இருப்பதாக சொல்லும் இடத்துக்கு சென்றவர்கள் உயிருடன் திரும்பியதில்லை. இந்த தேடுதல் பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த செய்திகள் அனைத்தும் புகைப்படங்களாக படத்தின் தொடக்கத்தில் சில நிமிடங்களில் சொல்லப்பட்டு விடுகிறது. படம் நிகழ்காலத்தில் தொடங்குகிறது.

சோழன் சென்றதாக நம்பப்படும் இடத்திற்கு செல்லும் ஆராய்ச்சியாளர் (பிரதாப் போத்தன்) காணாமல் போகிறார். அவரை கண்டு பிடிக்கும் பொறுப்பை அரசு ரீமா சென் தலைமையிலான டீமுக்கு அளிக்கிறது. அந்த டீமுடன் பிரதாப் போத்தனின் மகள் ஆண்ட்ரியாவும் இணைந்து கொள்கிறார். வியட்நாம் செல்லும் இவர்களுக்கு சுமை தூக்கும் போர்டர் குழுவின் தலைவராக வந்து சேர்கிறார் கார்த்தி.

சோழர்கள் தப்பிச் சென்றதாக நம்பப்படும் இடத்தை அடைய ஆண்ட்ரியாவிடம் ஒரு ஓலைச் சுவடி இருக்கிறது. கடல், ஆதிவாசிகள், பாம்பு, பசி தாகம், புதை மணல், கிராமம் என ஏழு ஆபத்துகளை அவர்கள் கடந்தாக வேண்டும். ஆபத்துகளை சாகசத்துடன் கடந்து சென்றால் அவர்களுக்கு ஆச்சரியம் காத்திருக்கிறது.

சோழர்கள் இன்றும் அங்கு தங்கள் பூர்வ நிலத்திலிருந்து அழைப்பு வரும் என காத்திருக்கிறார்கள். அவர்களது அரசர் பார்த்திபன். இதில் “நான்தான் தூதுவன்” என்கிறார் ரீமா சென். அரசர் நம்புகிறார். கிளம்பும் போதுதான் தெரிகிறது அவர் பாண்டிய குலத்தின் வாரிசு என்பதும், பாண்டியர்களின் குலதெய்வ சிலையை எடுத்துப் போக வந்தவர் என்பதும்.

அப்படியானால் உண்மையான தூதுவன் யார்? சோழர்கள் தங்களது ஆசைப்படி பூர்வீக நிலத்தைச் சென்றடைந்தார்களா? நெடிய போருடன் பதிலளிக்கிறார் செல்வராகவன்.

ஒளிப்பதிவு, ரீமா சென்னின் நடிப்பு, கார்த்தியின் மேனரிஸம், அரசர் பார்த்திபன், பின்னணி இசை, இரம் அலியின் காஸ்ட்யூம், சந்தானத்தின் கலை இயக்கம் அனைத்தும் ஆச்சரியமான அசத்தல்கள். கண்டிப்பாக பாராட்ட வேண்டியவர்கள் படத்தில் நடித்திருக்கும் துணை நடிகர்கள். நிறத்தை கொடுத்து உழைத்திருக்கிறார்கள்.

காருக்குள் இருந்து டாப்லெஸ்ஸாக வெளிவரும் அறிமுக காட்சியிலேயே அசத்துகிறார் கார்த்தி. ஆண்ட்ரியா, ரீமா இருவருக்கும் ரூட் விடும் ஏரியாக்கள் கலகல. ஒரு துண்டு கறியை ஆண்ட்ரியாவிடம் கொடுத்துவிட்டு எடுத்துக்கோ என்பது போல் தலையசைக்கிறாரே, அசத்தல். ஆனாலும்... கறிவேப்பிலை மாதிரிதான் வருகிறார் கடைசிவரை.

நிஜ ஹீரோ ரீமா சென்தான். கவர்ச்சியுடன் துவேசத்தையும் கலந்து அவர் காட்டுகிற ஆவேசம் இதற்குமுன் பார்த்திராதது. ரீமாவின் நிஜ உருவம் தெரிந்ததும் கண்ணில் நீர் ததும்ப நடக்கும் பார்த்திபன் கவர்கிறார். அவர் பாடும் நெல்லாடிய நிலமெங்கே உணர்வை அறுக்கும் பேரிசை.

நிழல் சிவதாண்டவமாக விரிவதும், அந்த நிழலில் புதை மணிலில் இருந்து தப்பிக்க ஓடுவதும் ரசிக்க வைக்கும் பிரமாண்டம். அதேபோல் பார்த்திபனின் அறிமுக காட்சி.

வகிடெடுத்தது போன்ற கதையை திரைக்கதை கத்தியால் அறுவை சிகிச்சை செய்திருக்கிறார் செல்வராகவன். அதுவும் இரண்டாம் பகுதி காட்சிகளில் குழப்பமோ குழப்பம். நிகழ்காலத்தில் நடக்கும் கதைக்கு மாயாஜாலம் எல்லாம் தேவையா? சோழர்கால தமிழ் காதுக்கு இனிமை. பாதி புரியவில்லை என்பதுதான் சோகம்.

ஏதோ ஒரு நாட்டில் இந்திய ராணுவம் சர்வ சாதாரணமாக வருவதும், தண்ணியடித்து பெண்களை மானபங்கப்படுத்துவதும் டூ மச். அதேபோல் சிவப்பு நிற ஆதிவாசிகளை ஒட்டு மொத்தமாக போட்டுத் தள்ளுகிறார்கள். எப்படிப்பா?

சாகச காட்சிகள் கிங் சாலமன்ஸ் மைன்ஸ், மெக்கனஸ் கோல்டு, கிளாடியேட்டர், 300 மம்மி, க்ரோஞ்சிங் டைகர்... என பல படங்களை நினைவுப்படுத்துகிறது. பெரிய கற்களை பொறித்து அதை எதிரிகள் மீது வீசுவது, அடிமைகளையும் கைதிகளையும் வீரர்களுடன் மோத விடுவது என சோழர்களுக்கு சம்பந்தமில்லாத ரோம பேரரசின் போர் கலைகளை படத்தில் காட்டுகிறார்கள். தொ.பரமசிவம் போன்றவர்களிடம் ஆலோசித்திருக்கலாம்.

ராணுவ அதிகாரி அழகம்பெருமாள் உட்பட பலரும் பாண்டிய குல வாரிசு என்பதும், சிலையை மீட்க ராணுவத்தில் சேர்ந்ததாக ஜல்லியடிப்பதும் இன்ஸ்டன்ட் பூ.

ராணுவம் சோழர்களை கொன்று அவர்களது பெண்களை மானப்பங்கப்படுத்தும் போது ஈழம் மனக்கண்ணில் விரிவதை தவிர்க்க முடியவில்லை. காயம்பட்ட பார்த்திபன் கடற்கரைக்கு ஊர்ந்து சென்று உதவி வேண்டி பூர்வீக சோழர்களை அழைப்பதும், உதவி செய்ய கப்பல்கள் அணிவகுத்து வருவது போல் கனவு காண்பதும் ஈழ சித்திரத்தை முழுமையாக்குகிறது.

செல்வராகவனின் முயற்சியும் பிரமாண்ட உழைப்பும், கை நழுவிப்போன திரைக்கதையால் கலகலத்துப் போனது, துரதிர்ஷ்டமின்றி வேறென்ன.

Source:webdunia

காணும் பொங்கல் கோலாகலம்: சுற்றுலா தலங்களில் மக்கள் வெள்ளம்

பொங்கல் பண்டிகையை தொடர்ந்து வரும் 3வது நாள் காணும் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. தை பிறந்த மகிழ்ச்சியை உறவினர்கள், நண்பர்களுடன் பரிமாறிக் கொள்வதற்காக தமிழர்கள் பாரம்பரியமாக இதைக் கொண்டாடி வருகிறார்கள். பெற்றோர், வயதில் மூத்தவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெறுவது இந்நாளின் முக்கிய அம்சமாகும்.

காணும் பொங்கல் தினத்தை முன்னிட்டு காவிரிக் கரையோர நகரங்கள், கிராமங்களில் உள்ள சுற்றுலா தலங்களில் மக்கள் குவிந்தனர். நீலகிரியில் உள்ள சிம்ஸ், தாவரவியல் பூங்கா, மேட்டூர் அணைப் பூங்கா, முக்கிய நகரங்களில் உள்ள பூங்காக்கள், மெரினா கடற்கரை ஆகியவற்றில் மக்கள் வெள்ளம் அலைமோதியது.

சென்னை நகர மக்களின் சுவாசக் காற்றாக விளங்கும் மெரினா கடற்கரையில் தினமும் மாலையில் குவியும் மக்கள் கூட்டத்தையே கட்டுப்படுத்த முடிவதில்லை. விடுமுறை நாளில் கூட்டம் குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கும். இன்று காணும் பொங்கல் தினம் என்பதால் மெரினா மக்கள் வெள்ளத்தில் மிதந்தது. மதியம் 3 மணிக்குப் பிறகு கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு மக்கள் கூட்டம் இருந்தது.

இதனால் மெரினா கடற்கரையில் மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. சிறு வியாபாரிகளுக்கு இந்தக் காணும் பொங்கல் பணப்பொங்கலாக இருந்தது. அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க 5,000 காவலர்கள் மெரினாவில் குவிக்கப்பட்டிருந்தனர்.

கடலில் குளிக்கவும், கட்டு மரங்களில் கடலுக்குள் செல்லவும் அனுமதிக்கப்படவில்லை. 8 குதிரைப்படை வீரர்கள், 35 நீச்சல் வீரர்களும், 4 படகுகளும் பாதுகாப்புக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தன.

Source:webdunia

ஆஸ்ட்ரேலியாவில் மேலும் ஒரு இந்திய டாக்சி ஓட்டுனர் தாக்கப்பட்டார்

ஆஸ்ட்ரேலியாவில் மேலும் ஒரு இந்திய டாக்சி ஓட்டுனர், அவருடைய டாக்சியில் பயணம் செய்த ஆஸ்ட்ரேலியவினரால் தாக்கப்பட்டுள்ளார்.

விக்டோரியா மாநிலத்திலுள்ள பல்லாராட் நகரில் நேற்று நள்ளிரவு இத்தாக்குதல் நடந்துள்ளதென அம்மாகாண காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்திய ஓட்டுனரின் டாக்சியில் வந்த 4 ஆஸ்ட்ரேலியர்களும் அவரை கேவலமாக திட்டியுள்ளதாகவும், அதில் ஒருவன் அவர் மீது எச்சில் உமிழ்ந்ததாகவும், பிறகு ஒன்றுசேர்ந்து தாக்கியதாகவும் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதென காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தாக்கப்பட்ட இந்திய ஓட்டுனரின் முகம் வீங்கியிருந்ததாகவும், உடலில் பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ள காவல் துறையினர், இத்தாக்குதலிற்கு இனவெறி காரணம் இல்லையென்று கூறியுள்ளனர்.

இந்திய டாக்சி ஓட்டுனர் ஒருவர் நேற்றும் இதேபோல் ஒரு கும்பலால் தாக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source:webdunia

மும்பை மராத்தான் ஓட்டம் துவக்கம்: 38 ஆயிரம் பேர் பங்கேற்பு

மும்பை மராத்தான் ஓட்டம் இன்று காலை பலத்த பாதுகாப்புடன் சத்ரபதி ரயில் நிலையத்தில் இருந்து துவங்கியுள்ளது. பாலிவுட் பிரபலங்கள், தொழிலதிபர்கள் உட்பட 38 ஆயிரம் பேர் இதில் பங்கேற்றுள்ளனர்.

மொத்தம் 42 கி.மீ தூரம் கொண்ட இந்த மராத்தான் ஓட்டத்தில், அயல்நாட்டினர், ஊனமுற்றோர், மூத்த குடிமக்கள், மாணவர்கள், இதர பிரிவினர் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.

கடந்தாண்டு திறக்கப்பட்ட பந்த்ரா-வோர்லி கடல்வழிச் சாலை வழியாக சென்று விட்டு மீண்டும் சத்ரபதி சிவாஜி நிலையத்தை வந்தடையும் இந்த மும்பை மராத்தான் ஓட்டத்தில் பாலிவுட் நட்சத்திரங்களான அக்சய் குமார், குல் பனாங், ராகுல் போஸ், ஜான் ஆப்ரகாம், ரெய்ட்ஸ் தேஷ்முக், குல்ஷான் குரோவர், டினா அம்பானி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா, அப்னாலயா என்ற அரசு சாரா தொண்டு நிறுவனத்திற்கு நிதியுதவி திரட்டுவதற்காக மும்பை மராத்தான் ஓட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

Source:webdunia

சிறிலங்க அரசு போர் குற்றம் செய்துள்ளது: டப்ளின் மக்கள் தீர்ப்பாயம் தீர்ப்பு

ஈழத் தமிழர்களுக்கு எதிரானப் போரில் சிறிலங்க அரசப் படைகள் போர் குற்றத்தையும், மானுடத்திற்கு எதிரான குற்றங்களையும் செய்துள்ளது என்றும், எனவே சிறிலங்க அரசு போர்க் குற்றவாளியே என்று ஐரிஸ் தலைநகர் டப்ளினில் நடந்த நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் ஆரம்ப கட்டத் தீர்ப்பளித்துள்ளது.

இத்தாலியின் மிலன் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் (Permanent People’s Tribunal) கடந்த 14, 15ஆம் தேதிகளில் ஐரிஸ் தலைநகர் டப்ளினில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்தப் போரில் நிகழ்த்தப்பட்டதாக கூறப்படும் போர்க் குற்றம், மானுடத்திற்கு எதிரான குற்றம், இனப் படுகொலை ஆகியன குறித்து விசாரணை செய்தது.

இந்த விசாரணையில், இறுதிக்கட்டப் போரில் பல பத்தாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட முல்லைத் தீவில் இருந்து தப்பி வந்த சாட்சிகளும், ஏராளமான ஆவணங்களும், படப்பதிவுகளும் முன்வைக்கப்பட்டன.

இரண்டு நாள் விசாரணையில் நிரூபிக்கப்பட்ட உண்மைகளின் அடிப்படையில் நேற்று (டப்ளின் நேரப்படி) பிற்பகல் 2 மணிக்கு, மக்கள் தீர்ப்பாயத்தின் தலைமை நீதிபதி பிரான்சுவா ஹூதா, தீர்ப்பாயத்தின் ஆரம்ப கண்டுபிடிப்புகளை (preliminary Findings) வெளியிட்டார்.

அதன்படி, கீழ்க்கண்ட 4 கண்டுபிடிப்புக்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஹூதா அறிவித்தார்:

1. சிறிலங்க அரசு போர்க் குற்றவாளியே.

2. சிறிலங்க அரசு மானுடத்திற்கு எதிரான குற்றம் இழைத்துள்ளது.

3. சிறிலங்காவிற்கு எதிரான இனப் படுகொலை குற்றச்சாற்றின் மீது மேலும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

4. விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்க அரசிற்கு இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை முறிந்ததற்கு சர்வதேச சமூகம், குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து ஆகியன பொறுப்பாகும் என்று கூறியுள்ளார்.

இந்த விசாரணையின் போது பாதுகாப்பு வளையத்திற்குள் தஞ்சமடைந்திருந்த மக்களின் மீது கனரக பீரங்கிகளைக் கொண்டு தாக்கியதும், அவர்களின் மீது வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளை வீசியதும் உறுதி செய்யப்பட்டது.

பிரான்சுவா ஹூதா தலைமையிலான இத்தீர்ப்பாயத்தில் ஐரிஸ் நாட்டின் டெனிஸ் ஹாலிடே, மேரி லாலர், இந்திய நீதிபதி (ஓய்வு) இராஜேந்திர சச்சார் உள்ளிட்ட 10 பேர் நீதிபதிகளாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஐரிஸ் மக்கள் தீர்ப்பாயத்திற்கு ஏற்பாடு செய்து சிறிலங்க அமைதிக்கான ஐரிஸ் மன்றம் என்ற அமைப்பு, கீழ்க்கண்ட கோரிக்கைகளை விடுத்துள்ளது:

1. இலங்கையில் நடைபெற்ற போரில் சிறிலங்க அரசப் படைகளும் விடுதலைப் புலிகளும் இழைத்த போர்க் குற்றங்கள், மானுடத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியன மீது ஐ.நா. பான்னாட்டு அளவிலான விசாரணை நடத்த வேண்டும்.

2. வன்னி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும், இரகசிய முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 11,000 பேர் உட்பட அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்.

3. சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகள், சித்ரவதைகள், பாலியல் குற்றங்கள், அப்பாவி மக்களுக்கு உணவு, குடிநீர் அளிக்காமல் துன்புறுத்துதல் ஆகிய அனைத்து குற்றங்களையும் முழுமையாக நிறுத்துமாறு சிறிலங்க அரசைக் கோருகிறோம்.

4. அரசியல் எதிர்ப்பை வன்முறையின் மூலமாகவும், மற்ற வழிகளிலும் ஒடுக்குவதை சிறிலங்க அரசு உடனடியாக கைவிட வேண்டும்.

5. இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக வரலாற்றுக் காலந்தொட்டு இழைத்து வரும் ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளை நிறுத்துமாறும், அவர்களுடைய பங்கேற்புடன் கூடிய அரசியல் தீர்வு காணும்படியும், அனைத்து மக்களுக்கும் பொதுவான மனித உரிமைகளை நடைமுறைபடுத்துமாறும் சிறிலங்க அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.

Source:webdunia

Sunday, January 10, 2010

ரிலையன்ஸ் லைப் இன்ஷ்யூரன்ஸ்: புதிய காப்பீடு திட்டம்

ரிலையன்ஸ் லைப் இன்ஷ்யூரன்ஸ் நிறுவனம் பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் வகையில் புதிதாக 17 காப்பீடு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.

இது குறித்து ரிலையன்ஸ் லைப் இன்ஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் தலைவர் கலாய் கோஷ் செய்தியாளர்களிடம் நேற்று கூறுகையில், பல்வேறு தரப்பட்ட வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும், பங்குச் சந்தை முதலீடு வாயிலாக அதிக இலாபத்தை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த யூலிப் திட்டங்களில் இரண்டு வகையான காப்பீடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதல் வகை 15 வருட காப்பீடு, அத்துடன் சேமிப்பு. மற்றவை 10 வருட காப்பீடு, குழந்தைகள் கல்வி, ஓய்வுகால சேமிப்பு திட்டமாகும்.

காப்பீடு செய்து கொள்பவர்கள் ரூ.500 முதல் ரூ.10 ஆயிரம் வரை பிரிமியம் செலுத்தும் வகையில் யூலிப் காப்பீடு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.


யூனிட் லிங்கிடு இன்ஷ்யூரன்ஸ் பாலிசி என்ற காப்பீடு திட்டம் சுருக்காமாக யூலிப் என்று அழைக்கப்படுகிறது. இந்த காப்பீடு திட்டங்களில், காப்பீடு செய்து கொண்டவர்கள் செலுத்தும் பிரிமியம், பங்குச் சந்தை, கடன் பத்திரங்கள், நிதி சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது.

Source: http://tamil.webdunia.com

மார்கழி குளிருக்கு பயந்து இரவில் கோலமிடுவது சரியா?

பிற மாதங்களில் கோலமிடும் பழக்கம் இருந்தாலும், மார்கழி மாதத்தில் அதிகாலை எழுந்து கோலமிட்டு அதில் பசுஞ்சாணத்தைப் பிள்ளையாராகப் பிடித்து வைத்து விளக்கேற்றி வழிபடும் வழக்கம் நம் மக்களிடையே உள்ளது.

ஆனால் தற்போதைய சூழலில் பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால், இரவு நேரத்திலேயே (11 மணியளவில்) பெண்கள் கோலமிடுகின்றனர். பின்னர் அடுத்த நாள் காலை நிதானமாக எழுந்து வழிபாடுகளை மேற்கொள்கின்றனர். இது சரியா?

பதில்: மார்கழி மாதத்தை தனுர் மாதம் என்று கூறுவர். இந்த மாதத்தில் சூரியன் குருவின் வீட்டில் (தனுசு) இருப்பார். இதன் காரணமாக சூரியக் கதிர் பரவுவதற்கு முந்தைய காலகட்டத்திற்கு தனி சக்தி உண்டாகும்.

இதன் காரணமாகவே அதிகாலையில் எழுந்து கோலமிட வேண்டும். அப்போது பெய்யும் பனிப்பொழிவானது நள்ளிரவில் பெய்யும் பனியைவிட மென்மையானதாக, தாக்கம் குறைந்ததாக, விஷத்தன்மையற்றதாக இருக்கும்.

எனவே, சூரியக்கதிர் பரவுவதற்கு முன்னதாக வாசல் தெளித்து கோலமிடும் போது மார்கழி மாத தட்பவெப்ப நிலைக்கு உடல் ஒத்துப்போகும். பெரிய நோய்கள் ஏற்படாமல் தடுத்துக் கொள்ள முடியும். மாறாக பனிப்பொழிவுக்கு பயந்து வீட்டிற்குள்ளேயே முடங்கிப் கிடப்பதால் உடல்நலம் மேம்படாது.

சீதோஷ்ண நிலையை வாழும் சூழலுக்கு தகுந்தாற் போல் அமைத்துக் கொள்ளவே, வாசலில் கோலமிட்ட பின்னர் விளக்கு வைத்து வழிபட வேண்டும் என முன்னோர்கள் கூறியுள்ளனர். ஒன்றுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் விளக்கு வைப்பதால் அதிலிருந்து வெளியேறும் வெப்பம் வீட்டை கதகதப்பாக வைக்க உதவும். சீதோஷ்ண நிலையும் சமனடையும்.

மார்கழிப் பனியில் மண்ணும் குளிரும்; தைப் பனியில் தரையும் குளிரும் என முன்னோர்கள் கூறியுள்ளனர். எனவே, வாசலில் கோலமிட்டு சாணத்தில் பூசணிப்பூவை வைப்பதன் மூலம் பனியால் ஏற்படும் நோய்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.

நமது வழிபாடுகள் அனைத்துமே இயற்கையுடன் ஒத்துப்போகும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, மார்கழி, தை மாதங்களில் வீட்டிற்கு அருகிலேயே பூசணிப்பூ, பரங்கிப்பூ, செம்பருத்தி உள்ளிட்ட பூ வகைகள் கிடைக்கும். அவற்றை சாணத்தின் மீது வைத்தால் நீண்ட நேரம் வாடாமல் இருக்கும்.

சாணத்தின் மீது வைக்கப்படும் பூசணிப்பூ, பரங்கிப் பூ ஆகியவை வெளியேற்றும் வாசனை பனிக்காற்றில் கலந்து சிறந்த கிருமி நாசினியாகத் திகழும் என்பதால் அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

எனவே, இரவில் கோலமிடுவதைத் தவிர்க்க வேண்டும். அதிகாலையில் ஓஸோன் வாயுக்கள் அதிகம் வெளியேறும். அந்த நேரத்தில் கோலமிடுவதால், சுவாசப் பிரச்சனைகள் தீரும். புத்துணர்ச்சி ஏற்படுத்தும்.

Source: http://tamil.webdunia.com

2010 இறுதிக்குள் கல்விச் சீர்திருத்தம்: கபில் சிபல்

கல்வி தொடர்பான சட்டத் திருத்தங்கள், அன்னிய கல்வி நிறுவனங்களுக்கு இந்தியாவில் அனுமதி உள்ளிட்ட கல்வித் தொடர்பான சீர்திருத்தங்கள் அனைத்தும் இந்த ஆண்டின் இறுதிக்குள் நிறைவு பெற்றுவிடும் என்று மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ளார்.

டெல்லியில் ‘பாஸ்டன் பல்கலை இந்தியா 2010 உலக தலைமை மாநாடு’ என்ற தலைப்பில் நடந்தக் கருத்தரங்கில் பேசிய அமைச்சர் கபில் சிபல், கல்வி சீர்திருத்தம் தொடர்பாக எதையெல்லாம் உறுதியளித்திருந்தோமோ அவற்றையெல்லாம் நிறைவேற்றிடும் ஆண்டு இது என்று கூறியுள்ளார்.

“2010 முடிவிற்குள், கல்வித் தொடர்பான சீர்திருந்தங்கள் அனைத்தும் நிறைவு செய்யப்படும். நான் அளிக்கும் உறுதிமொழி இது” என்று கபில் சிபல் கூறியுள்ளார்.

கல்விச் சீர்திருத்தம் தொடர்பாக 6 முக்கிய சட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிட்டத்தக்கது.

Source: http://tamil.webdunia.com

Friday, January 8, 2010

1970 amd 80's Old Computer Ads

System Industries: “80 MB for under $12,000″ (1977)



Technico Inc TMS9900: “Two bytes are better than one” (1978)



RadioShack: Issac Asimov featuring a color computer (1982)



HoneyWell: “What the Heck is Electronic Mail?” (1981)



Microsoft: “Introducing Microsoft Excel” (1987)



LBMS: “Cut through paper-based Case Methods” (1991)



Penril: “We call it a Penril Modem” (1971)



Digi-Log: “Briefcase Portability” (1976)



Cromemco: “The New 16K RAM card…” (1977)



RadioShack: “Designing a revolutionary concept…” (1985)



Source: http://worldphotocollections.blogspot.com

Tuesday, January 5, 2010

பணியில் இருக்கும்போது அரசு டிரைவர்கள் செல்போன் பயன்படுத்தத் தடை

சென்னை: அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர்கள், பணியில் இருக்கும்போது செல்போன்களை எடுத்துச் செல்லவும், பயன்படுத்தவும் அரசு தடை விதித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசின் போக்குவரத்துத்துறை செயலாளர் அதுல்யா மிஸ்ரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அரசுப் பேருந்து ஓட்டுனர்கள் பேருந்தை ஓட்டிக்கொண்டே செல்போனில் பேசுவதாகவும், அதனால் பேருந்துகள் விபத்துக்களில் சிக்க நேரிடுவதாகவும் அரசின் கவனத்துக்கு பல புகார்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. எனவே, அரசுப் பேருந்து ஓட்டுனர்கள் பணியில் இருக்கும்போது செல்போனை எடுத்துச்செல்லக்கூடாது.

பஸ் டிரைவர்கள் பணியின்போது செல்போனை பயன்படுத்துகிறார்களா என்பதை பேருந்து பரிசோதகர்கள் கண்காணிக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. அனைத்து போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர்களும் அரசின் உத்தரவினை முழுமையாக நடைமுறைப்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

பேருந்தை ஓட்டுனர்கள் இயக்க செல்லும் முன்பு அவர்கள் செல்போனை உடன் எடுத்துச் செல்லாதவாறு போக்குவரத்து மேற்பார்வையாளர்கள் மூலம் கண்காணிக்க அனைத்து போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பயணிகள் பாதுகாப்பு கருதியும் மற்றும் அனைவருடைய பாதுகாப்பை முன்னிட்டும் ஓட்டுனர்கள் நிர்வாகத்துடன் ஒத்துழைக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பணியின்போது செல்போனை எடுத்துச்செல்லும் ஓட்டுனர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் இந்த தடை உத்தரவு அமலுக்கு வருகிறது.

Source: thatstamil.in

'அல்-கொய்தா': ஏமனில் யுஎஸ்-யுகே தூதரகங்கள் மூடல்

சானா: அல்கொய்தா அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதை அடுத்து ஏமனில் உள்ள அமெரிக்க, இங்கிலாந்து நாட்டு தூதரகங்கள் மூடப்பட்டுவிட்டன.

ஏமன் நாட்டில் அல் கொய்தாவினரின் நடமாட்டம் அதிகளவில் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஏமன் நாட்டின் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில், அரசின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட இடங்களில் அல் கொய்தாவினர் தங்களது முகாம்களை அமைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.

இங்கு செலவு குறைவு என்பதால் உலகெங்கும் இருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அரபி மொழி கற்பதற்காக வருகின்றனர். ஆனால் அல் கொய்தா தொடர்புகளுக்காகவே பலரும் வருவதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே, கிறிஸ்துமஸ் தினத்தன்று டெட்ராய்ட் விமானத்தில் பிடிபட்ட தீவிரவாதி அல்கொய்தா அமைப்பைச் சேர்ந்தவன் என அமெரிக்க புலனாய்வுத் துறை வலுவாக சந்தேகிக்கிறது. குறிப்பாக ஏமனில் இருந்துதான் சதிதிட்டங்கள் தீட்டப்பட்டதாக அமெரிக்கா சந்தேகிக்கிறது.

கடந்த 31ம் தேதி ஏமனில் உள்ள அமெரிக்கர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என உளவுப்பிரிவும் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில் ஏமனில் உள்ள தனது தூதரகத்தை அமெரிக்கா நேற்று மூடிவிட்டது. அதே போல இங்கிலாந்தம் தூதரகத்தை முடியுள்ளது.

Source: thatstamil.in

வேட்டைக்காரன் வெற்றியா?-சில உண்மைகள்

வேட்டைக்காரன் வெளியான அன்றே, 'இது சரித்திர வெற்றி, வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத வெற்றி' என்றெல்லாம் அடித்துவிட்டனர் நடிகர் விஜய்யும் அவரது தந்தையும்.

இந்த 'மா...பெரும்' வெற்றிப் படத்தை மேலும் பெரிய வெற்றிப் படமாக்க விஜய் இந்த வாரம் முதல் நகரம் நகரமாக சுற்றுப் பயணம் செல்லவும் வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.

இந் நிலையில் படத்தின் உண்மையான வசூல் நிலவரம் என்ன... இன்றைய நிலவரம் என்ன என்பது குறி்த்து ஒரு அலசல்.

இந்தப் படத்தைப் பொறுத்த வரை அதன் ஒரிஜினல் தயாரிப்பாளரான ஏவிஎம் பாலசுப்ரமணியம், கிரேட் எஸ்கேப் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் சன் டிவியின் பப்ளிசிட்டி மேல் நம்பிக்கை வைத்து வாங்கிய விநியோகஸ்தர்கள்தான் மாட்டிக் கொண்டவர்கள்.

முதல் மூன்று தினங்கள் படத்துக்கு ஓப்பனிங் சிறப்பாக வந்திருந்தாலும், திங்கள்கிழமையே டிராப் தொடங்கிவிட்டதாகக் கூறுகிறார் தமிழ்நாடு என்டர்டெயின்மெண்ட் ஆசிரியரும், பாக்ஸ் ஆபீஸ் விவரங்களை சேகரித்து வருபவருமான ராமானுஜம்.

அவர் கூறுகையில், 'இந்தப் படம் நிச்சயம் வெற்றிப் படம் என்று சொல்ல முடியாது. அப்படி சொல்லி தவறான ட்ரெண்டுக்கு வழிகாட்டவும் கூடாது. விஜய் நடித்த வேட்டைக்காரன் வெற்றி என்றால், ஒரிஜினல் வெற்றிப் படங்களை என்னவென்று சொல்வது...

மதுரை, சேலம் பகுதிகளில் 50 சதவீத்துக்கு மேல் 'அடி' விழுந்திருக்கிறது இந்தப் படத்துக்கு. திருச்சி, திருநெல்வேலியில் மட்டும் தப்பித்திருக்கிறது' என்றார்.

சென்னையைப் பொறுத்த வரை, விஜய் தன் வெற்றியின் அளவுகோலாகக் கருதும் கமலா தியேட்டரிலும் கூட 30 சதவீதத்துக்கும் மேல் ரசிகர்கள் வருகை குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. சத்யம் போன்ற திரையரங்குகளில் இப்போது கெளன்டரிலேயே டிக்கெட்டுகள் கிடைப்பதாக சத்யம் இணையத் தளம் தெரிவிக்கிறது.

வேட்டைக்காரனின் ஒரு நகர வினியோக உரிமையை ரூ 3.5 கோடி கொடுத்துப் பெற்றுள்ள பிரபல வினியோகஸ்தருக்கு மட்டும் ரூ.1 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

பொங்கல் சீஸனில் இந்தப் படம் தியேட்டர்களை விட்டு தூக்கப்படும் என்பதால், இந்தத் தொகையை அவரால் மீண்டும் பெற முடியாத நிலை.

மதுரையில் 50 சதவீதத்துக்கும் அடி என்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால், நஷ்டத்தை கூட
இவர்களால் வாய்விட்டு வெளியே சொல்ல முடியாத நிலை. மறைமுகமாக அல்லது தெரிந்த நபர்களிடம் சொல்லி தங்கள் குமுறலைத் தீர்த்துக் கொள்கிறார்கள்.

"விஜய்க்கு இந்தப் படம் தோல்வியாக அமைய வேண்டும் என்று நாம் கூறவரவில்லை. நிச்சயம் அவரைப் போன்ற நடிகர்களுக்கு இந்த நிலை வரக்கூடாது. காரணம் ரஜினிக்கு அடுத்து அல்லது இணையான மாஸ் ஹீரோ விஜய்தான்.

ஆனால் இன்று உச்ச நட்சத்திரங்களுள் ஒருவராகத் திகழும் விஜய், தனது சராசரிக்கும் குறைவான ஒரு படத்தை, வெற்றிப் படம் என்று பிரச்சாரம் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதற்கான காரணங்களைச் சிந்திக்க வேண்டும்" என்கிறார் பெயர் வெளியிட விரும்பாத, வேட்டைக்காரன் படத்தின் முக்கிய விநியோகஸ்தர் ஒருவர்.

இனிமேல் கதை அம்சம் இல்லாவிட்டால் யாருடைய படமாக இருந்தாலும் தப்பாது என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம். இனியாவது விஜய் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்க வேண்டும் என்கிறார் அவர்.

Source:thatstamil.in

வசூல்: 1 பில்லியன் டாலரைத் தாண்டிய அவதார்!

பிளாக் பஸ்டர் என்ற சொல்லுக்கு சரியான அர்த்தம் என்னவென்று ஜேம்ஸ் கேமரூன் காட்டியுள்ளார்.

'இதுதான்டா படம்' என்று தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட அனைத்து தகுதிகளும் நிறைந்த படம் 'அவதார்'தான் என மீடியா எழுதி வருகிறது.

இந்த நிலையில், இப்போது வசூலிலும் இந்தப் படம்தான் கிங் என்று சொல்லும் ஒரு அபார சாதனையை நிகழ்த்தியுள்ளது அவதார்.

வெளியான 17 நாட்களில் 1 பில்லியன் டாலர் என்ற வசூல் சாதனையைப் படைத்துள்ளது அவதார்.

இந்தப் படம் தயாரிக்க செலவிடப்பட்ட தொகை, 237 மில்லியன் டாலர்கள். கொட்டும் பனி, வேலை நெருக்கடி எதுவுமே இந்தப் படத்தின் வசூலைப் பாதிக்கவில்லை. அதுவும் புத்தாண்டு தினத்தில் அமெரிக்கா-கனடாவில் மட்டும் 69 மில்லியன் டாலர்களைக் குவித்துள்ளது அவதார்.

மூன்றாவது வாரத்தில் 1,018,811,000 டாலர்களை வசூலித்து புதிய சாதனை படைத்துள்ளது இந்தப் படம். கேமரூன் இதற்கு முன்பு எடுத்த டைட்டானிக் கடந்த 12 ஆண்டுகளில் 1.84 பில்லியன் வசூல் செய்துள்ளது. இதுவே இன்றுவரை உலகில் அதிகம் வசூல் செய்த படம். ஆனால் அடுத்த ஒரு மாதத்தில் இந்த சாதனையை அவதார் முறியடித்துவிடும் என்று நம்புவதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்றைய தேதிக்கு, உலக சினிமா வரலாற்றில் அதிக வசூலைக் குவித்த நான்காவது படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது அவதார்.

Source: thatstamil.in

Friday, January 1, 2010

சென்னைக்கு போகிறார்களே-ரோசய்யா கவலை

ஹைதராபாத்: தெலுங்கானா பிரச்சினையால் பல சினிமா தயாரிப்பாளர்கள் ஆந்திராவை விட்டு தமிழகத்தின் சென்னைக்கு இடம் மாறப் போவதாக தெரிய வந்துள்ளது என்று ஆந்திர முதல்வர் ரோசய்யா கவலை தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா போராட்டம் மிகத் தீவிரமாகிவிட்டதால், தெலுங்குப் படவுலகமும் ஸ்தம்பித்துப் போயுள்ளது. கலவரக்காரர்கள் தொடர்ந்து சினிமாத் துறையினரை குறிவைத்து தாக்கி வருகிறார்கள். தெலுங்கானா பகுதியில் முன்னணி நடிகர்களின் படங்களை ஓடவிடாமல் செய்து வருகின்றனர்.

மோகன்பாபு, அவரது மகன்கள், சிரஞ்சீவி, அவர் மகன் ராம்சரண், மருமகன் அல்லு அர்விந்த், கிருஷ்ணாவின் மகன் மகேஷ் பாபு ஆகியோர் படங்களைத் திரையிடவும், படப்பிடிப்புகள் நடத்தவும் முடியாத நிலை உள்ளது தெலுங்கானா பகுதியில். ஆந்திர திரைப்படத் துறையின் தலைமை இடம் ஹைதராபாத், தெலுங்கானா பகுதியில் அமைந்திருப்பதால், தெலுங்கானாவை ஆதரிக்காத நடிகர்கள் அங்கு குடியிருக்கக் கூடாது என போராட்டக்காரர்கள் எச்சரித்துள்ளனர்.

இருதினங்களுக்கு முன் சிரஞ்சீவி மைத்துனரின் கீதா ஆர்ட்ஸ் கட்டடம் தாக்கப்பட்டது. ராமோஜிராவ் பிலிம் சிட்டியும் மூடப்பட்டுவிட்டது.

எனவே வேறு வழியின்று, தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த முன்னணி தயாரிப்பாளர்கள் சென்னையை நோக்கி வரத் துவங்கிவிட்டனர். பல தெலுங்குப் படங்களின் படப்பிடிப்புகள், சத்தமில்லாமல் தமிழகப் பகுதிகளில் நடந்து வருவது குறிப்பிடத் தக்கது.

இதையெல்லாம் கருத்தில் கொண்ட ஆந்திர முதல்வர் ரோசய்யா, தெலுங்கானா போராட்டத்தால் ஆந்திரா பெரும் இழப்பைச் சந்தித்துக் கொண்டிருப்பதாக கவலையுடன் தெரிவித்தார், நிருபர்களிடம்.

மேலும் அவர் கூறுகையில், "ஹைதராபாத் என்ற சர்வதேச தரம் மிக்க தொழில் நகரத்தின் இமேஜே சுத்தமாக அடிவாங்கிவிட்டது.

தொடர்ந்து தங்கள் மீது தாக்குதல் நடந்ததால், எங்கிருந்து தெலுங்கு சினிமா ஹைதராபாத்துக்கு வந்ததோ, அதே இடத்துக்கு (சென்னைக்கு) சென்றுவிடும் நிலை உருவாகிவிட்டது. அவர்களைத் தடுக்கவும் வழியில்லை. தொழில் துறையிலும் இதே அறிகுறிகள் உள்ளன. தெலுங்கானா போராட்டக்காரர்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.." என்றார்.

Source:thatstamil.in

அதிவேக வாகனங்களை 'பிடிக்க' ரேடார்!

சென்னை: 2010ம் ஆண்டில் சென்னை [^] போக்குவரத்தை நவீனமாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். வேகமாக போகும் வாகனங்களைக் கண்டுபிடிக்க ரேடார்கள் வரவுள்ளன என்று சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ராஜேந்திரன் கூறினார்.

சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ராஜேந்திரன் செய்தி [^]யாளர்களிடம் கூறியதாவது:

சென்னை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பகுதியில் 60 லட்சம் பேர் வசிக்கின்றனர். 3.2 லட்சம் வாகனங்கள் உள்ளன.

2850 கி.மீ சாலையும், 44 கி.மீ கடற்பரை பகுதியும் உள்ளது. சென்ட்ரல் எழும்பூர் உள்பட 39 ரயில் நிலையங்களும் கோயம்பேடு பஸ் ஸ்டாண்டு உள்பட 53 பஸ் நிலையங்களும் உள்ளன.

இந்த ஆண்டு நவம்பர் வரை 1 லட்சத்து 26 ஆயிரத்து 158 வழக்குகள் பல்வேறு சட்டப் பிரிவுகளின்கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1123 பேர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். திருட்டு, கொள்ளை சம்பவங்களில் 75 சதவீதத்திற்கு மேல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

சாலை விபத்தில் இறந்தவர் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட குறைந்துள்ளது. போக்குவரத்தை சீரமைக்க கண்காணிப்பு கேமராக்கள் நிறுவியது உள்பட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

2010 ஆம் ஆண்டில் மேலும் 40 சந்திப்புகளில் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவுதல், புதிய தலைமை செயலகம் சுற்றி 26 சந்திப்புகளில் நவீன போக்குவரத்து முறையை அமல்படுத்துதல் மற்றும் வாகனங்களின் வேகத்தை கண்டுபிடிப்பதற்காக ரேடார்கள் வாங்குதல் போன்ற திட்டங்கள் உள்ளன.

கடன் அட்டை மோசடியை கட்டுப்படுத்தவும், மற்றும் கணினி வழி குற்றங்களை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டு உள்ளது என்று கூறினார்.

Source:thatstamil.in

குறைந்து வரும் மலேசிய தமிழர்களின் எண்ணிக்கை

கோலாலம்பூர்: மலேசியா [^]வில் வாழும் இந்திய வம்சவாளியினரின் (பெரும்பாலும் தமிழர்கள்தான்) எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. இப்படியே போனால் எதிர்காலத்தில் மலேசியாவில் தமிழர்களின் எண்ணிக்கை அடியோடு காணாமல் போய் விடும் என்று கவலை தெரிவித்துள்ளார் மலேசிய இந்து சங்க துணைத் தலைவர் பாலதருமலிங்கம்.

இதுகுறித்து தமிழ்நேசன் இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், இப்போதெல்லாம் இந்தியர்கள் குறைந்த அளவிலான குழந்தைகளையே விரும்புகிறார்கள். அதிக குழந்தை பெற்றுக் கொள்வதை அவர்கள் விரும்புவதில்லை.

ஒன்று அல்லது 2 குழந்தைகளுக்கு மேல் அவர்கள் விரும்புவதில்லை. இந்த நிலை நீடித்தால் எதிர்காலத்தில் மலேசியாவில் இந்திய வம்சாவளியினர் பூண்டோடு அழிந்து போகும் வாய்ப்பு உள்ளது என்றார் பாலதருமலிங்கம்.

மலேசிய மக்கள் தொகையில், மூன்று முக்கிய இனப் பிரிவுகள்தான் மேலோங்கியுள்ளன. பெரும்பான்மைப் பிரிவாக மலாய் மக்கள் உள்ளனர். அடுத்த இடத்தில் சீனர்கள் (25 சதவீதம்) உள்ளனர். 3வது இடத்தில் வம்சாவளி இந்தியர்கள் உள்ளனர். இவர்களின் எண்ணிக்கை 8 சதவீதமாகும். இவர்களில் பெரும்பாலோனோர் தமிழர்களே.

Source:thatstamil.in

பூமியை நோக்கி வரும் விண் கல்- தடுக்க முயலும் ரஷ்யா!

மாஸ்கோ: மிகப் பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி வந்து கொண்டுள்ளது. இதைத் தடுத்து பூமியைக் காப்பாற்ற ரஷ்யா முயற்சி மேற்கொண்டுள்ளது.

விண்வெளியில் விண்கற்கள் கோடிக்கணக்கில் சுற்றிக் கொண்டிருக்கின்றன. இவற்றில் எப்போதாவது சில புவயீர்ப்பு வளையத்திற்குள் வரும்போது பூமியை நோக்கி பாய்ந்து வரும். இந்தக் கற்கள் வரும் வேகத்திலேயே எரிந்து சாம்பலாகி விடும். சில பெரிய கற்கள் மட்டும் தப்பிப் பிழைத்து பூமியில் வந்து விழும்.

இவை விழுந்த இடத்தில் கல்லின் சைசுக்கேற்ப பள்ளம் ஏற்படுவது உண்டு. அந்த வகையில் தற்போது மிகப் பெரிய விண்கல் ஒன்று பூமியை நோக்கி வந்து கொண்டுள்ளது. இந்த விண்கல்லுக்கு அபோஃபிஸ் (Apophis) என்று பெயரிட்டுள்ளனர்.

அபோஃபிஸ் விண்கல், 2029ம் ஆண்டுவாக்கில் பூமியிலிருந்து 30,000 கிலோமீட்டர் தொலைவுக்கு நெருங்கி வரும். அதற்கு அடுத்த 7 ஆண்டுகளில் அதாவது 2036ம் ஆண்டு அது புவிவட்டப் பாதைக்குள் நுழைய வாய்ப்புள்ளதாம். இது நடந்தால் அந்தக் கல் பூமியின் மீது வந்து விழ வாய்ப்பு மிக அதிகம்.

அபோஃபிஸ் விண்கல்லின் சுற்றளவு 350 மீட்டர் அதாவது 1150 அடி என்று தோராயமாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கல் 1,000,000 டன் எடை கொண்டதாக இருக்கலாம் என்கிறார்கள்.

இது பூமியின் மீது விழுந்தால், அந்த இடத்தில் பிரான்ஸ் நாட்டின் சைசுக்கு மிகப் பெரிய பள்ளம் ஏற்படும். பல அணு குண்டுகள் ஒரே நேரத்தில் வெடித்தால் ஏற்பட்டால் ஏற்படும் அளவுக்கு மாபெரும் சேதம் ஏற்படும்.

இந்தக் கல் கடலில் விழுந்தால் நாம் இதுவரை கேள்விப்பட்டிராத அளவுக்கு சுனாமி அலைகள் ஏற்பட்டு மனித குலத்துக்கு பெரும் உயிர்ச் சேதம் ஏற்படும்.

எனவே இந்த விண் கல்லை பூமியில் விழாமல் தடுக்க அமெரிக்கா உள்ளிட்ட பெரிய நாடுகளுடன் இணைந்து ரஷ்ய விஞ்ஞானிகள் முயற்சிகளில் இறங்கியுள்ளனராம்.

விரைவில் இதுதொடர்பாக ரஷ்ய விஞ்ஞானிகளின் மிகப் பெரிய கூட்டம் கூடவுள்ளது. இதுகுறித்து ரஷ்ய விண்வெளிக் கழகத்தின் தலைவரான அனடோலி பெர்மினோவ் கூறுகையில், விரைவில் எங்களது கழகத்தின் கூட்டம் நடைபெறவுள்ளது. கல் பூமியின் மீது விழாமல் தடுக்க என்ன செய்யலாம் என்பது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது என்றார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், இந்தக் கல் பூமியின் மீது வந்து விழுந்தால் லட்சக்கணக்கான உயிர்கள் பலியாகும். பல ஆயிரக்கணக்கான ஊர்கள் சாம்பலாகி விடும்.

இது வந்து விழும் வரை காத்திருக்காமல், அதைத் தடுக்கும் வகையிலான பாதுகாப்பு நடைமுறைகளை சில கோடிகளை செலவழித்து மேற்கொள்வது நல்லது என நாங்கள் கருதுகிறோம். வரும் முன் காத்து்க கொள்ளும் அடிப்படையே இது.

விரைவில் அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய நாடுகள் ஆகியவற்றின் விண்வெளி நிபுணர்களுடன் இணைந்து ஒரு ஆய்வுக் கூட்டம் நடக்கவுள்ளது. பூமிக்கு ஏற்படவுள்ள இந்தப் பேரழிவை எப்படி சமாளிப்பது என்பது குறித்து இதில் ஆராயப்படும்.

இந்தக் கல் பூமியில் வந்து விழாமல் தடுக்கும் வகையில் ஒரு பிரமாண்ட ராக்கெட்டை அனுப்பி அதை சிதறடிப்பது அல்லது திசை திருப்புவது, அல்லது அந்தக் கல்லுக்குள் வெடி பொருட்களை புதைத்து வெடிக்கச் செய்வது என பல யோசனைகள் கூறப்படுகின்றன என்கிறார் அனடோலி.

இதுகுறித்து அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா கூறுகையில், இந்த விண்கல் பூமியின் மீது விழும்போது மிகப் பெரிய அளவுக்கு நாசம் ஏற்படும். எங்களுடைய கணக்குப்படி 2036ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி இந்த விண்கல் பூமியைத் தாக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன் பூமியை எரிகல் தாக்கினால் என்ற கற்பனையின் அடிப்படையில் Armageddon என்ற ஹாலிவுட் திரைப்படம் வெளியானது.

மைக்கேல் பே இயக்கிய அந்தப் படத்தில் பூமியைக் காக்க புரூஸ் வில்லிஸ் தலைமையில் ஒரு 'டிரில்லர்'கள் குழு எரிகல்லில் தரையிறங்கி அணு குண்டு வைத்து அதை இரண்டாக உடைத்து பூமி மீது மோதால் திசை திருப்பும்.

கிட்டத்தட்ட இந்தக் கதை உண்மையாகிவிடும் போலியிருக்கிறது!

Source:thatstamil.in