Sunday, January 10, 2010

2010 இறுதிக்குள் கல்விச் சீர்திருத்தம்: கபில் சிபல்

கல்வி தொடர்பான சட்டத் திருத்தங்கள், அன்னிய கல்வி நிறுவனங்களுக்கு இந்தியாவில் அனுமதி உள்ளிட்ட கல்வித் தொடர்பான சீர்திருத்தங்கள் அனைத்தும் இந்த ஆண்டின் இறுதிக்குள் நிறைவு பெற்றுவிடும் என்று மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ளார்.

டெல்லியில் ‘பாஸ்டன் பல்கலை இந்தியா 2010 உலக தலைமை மாநாடு’ என்ற தலைப்பில் நடந்தக் கருத்தரங்கில் பேசிய அமைச்சர் கபில் சிபல், கல்வி சீர்திருத்தம் தொடர்பாக எதையெல்லாம் உறுதியளித்திருந்தோமோ அவற்றையெல்லாம் நிறைவேற்றிடும் ஆண்டு இது என்று கூறியுள்ளார்.

“2010 முடிவிற்குள், கல்வித் தொடர்பான சீர்திருந்தங்கள் அனைத்தும் நிறைவு செய்யப்படும். நான் அளிக்கும் உறுதிமொழி இது” என்று கபில் சிபல் கூறியுள்ளார்.

கல்விச் சீர்திருத்தம் தொடர்பாக 6 முக்கிய சட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிட்டத்தக்கது.

Source: http://tamil.webdunia.com

No comments:

Post a Comment