Thursday, December 31, 2009

சென்னையில் மாபெரும் பூக்கள் கண்காட்சி

சென்னை: சென்னையில் மாபெரும் மலர்க் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மலர்க் கண்காட்சி சுற்றுலாப் பயணிகளையும், உள்ளூர் மக்களையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.

இந்த மலர்க் கண்காட்சியின் முக்கிய அம்சமே, காதல் சின்னமான தாஜ்மஹால், ஈபிள் டவர், இந்தியா கேட், பிரமிட் ஆகியவற்றின் வடிவில் அமைக்கப்பட்டுள்ள மலர் அலங்காரமே. பல்வேறு பூக்களைக் கொண்டு இவை அழகுற அமைக்கப்பட்டுள்ளன.

சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் இந்த மலர்க் கண்காட்சியும், மலர் அலங்காரமும் அமைக்கப்பட்டுள்ளதாக மலர்க் கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த மலர்க் கண்காட்சியில் 350க்கும் மேற்பட்ட வகையான மலர்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றில் சில வெளிநாட்டு மலர்களாகும். வருகிற ஞாயிற்றுக்கிழமை வரை இந்த மலர்க் கண்காட்சி நடைபெறுகிறது.

Source:thatstamil.in

No comments:

Post a Comment