Monday, August 3, 2009

இந்தியாவில் சாப்ட்வர் பைரசி (Software Piracy) ஐ தடுக்க தனி குழு..

இந்திய அரசாங்கம் மென்பொருட்களை அனுமதியின்றி பயன்படுத்துவதை கண்காணிக்க "Copyright Enforcement Advisory Council" என்ற குழுமத்தை நியமித்துள்ளது .

BSA-IDC Piracy ஆய்வின்படி வீட்டு கணினிகளில் (PC) திருட்டுத்தனமாக அனுமதியின்றி மென்பொருட்களை பயன்படுத்துவது 57 நாடுகளில் (மொத்தம் 110 நாடுகள்) தடுக்கப்பட்டு விட்டன. எனினும் 36 சதவிகிதமாக இருந்த அனுமதியில்லாத மென்பொருள் பயன்பாடு, சிறிது நாட்களுக்குள் 38-41 சதவிகிதமாக அதிகரித்துவிட்டது.

இந்த குற்றத்திற்காக பிடிபடுபவர்களுக்கு அபராதமோ அல்லது சிறை தண்டனையோ Intellectual Property Rights (IPR) சட்டத்தின்படி விதிக்கப்படும்.

ஒரு சப்-இன்ஸ்பெக்டர் எந்த வாரன்ட்டும் இல்லாமல் இந்த குற்றத்திற்காக ஒருவரை கைது செய்யலாம் என தகவல்கள் கிடைத்துள்ளன.

Ananth.R

No comments:

Post a Comment