ஹைதராபாத்: தெலுங்கானா பிரச்சினையால் பல சினிமா தயாரிப்பாளர்கள் ஆந்திராவை விட்டு தமிழகத்தின் சென்னைக்கு இடம் மாறப் போவதாக தெரிய வந்துள்ளது என்று ஆந்திர முதல்வர் ரோசய்யா கவலை தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா போராட்டம் மிகத் தீவிரமாகிவிட்டதால், தெலுங்குப் படவுலகமும் ஸ்தம்பித்துப் போயுள்ளது. கலவரக்காரர்கள் தொடர்ந்து சினிமாத் துறையினரை குறிவைத்து தாக்கி வருகிறார்கள். தெலுங்கானா பகுதியில் முன்னணி நடிகர்களின் படங்களை ஓடவிடாமல் செய்து வருகின்றனர்.
மோகன்பாபு, அவரது மகன்கள், சிரஞ்சீவி, அவர் மகன் ராம்சரண், மருமகன் அல்லு அர்விந்த், கிருஷ்ணாவின் மகன் மகேஷ் பாபு ஆகியோர் படங்களைத் திரையிடவும், படப்பிடிப்புகள் நடத்தவும் முடியாத நிலை உள்ளது தெலுங்கானா பகுதியில். ஆந்திர திரைப்படத் துறையின் தலைமை இடம் ஹைதராபாத், தெலுங்கானா பகுதியில் அமைந்திருப்பதால், தெலுங்கானாவை ஆதரிக்காத நடிகர்கள் அங்கு குடியிருக்கக் கூடாது என போராட்டக்காரர்கள் எச்சரித்துள்ளனர்.
இருதினங்களுக்கு முன் சிரஞ்சீவி மைத்துனரின் கீதா ஆர்ட்ஸ் கட்டடம் தாக்கப்பட்டது. ராமோஜிராவ் பிலிம் சிட்டியும் மூடப்பட்டுவிட்டது.
எனவே வேறு வழியின்று, தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த முன்னணி தயாரிப்பாளர்கள் சென்னையை நோக்கி வரத் துவங்கிவிட்டனர். பல தெலுங்குப் படங்களின் படப்பிடிப்புகள், சத்தமில்லாமல் தமிழகப் பகுதிகளில் நடந்து வருவது குறிப்பிடத் தக்கது.
இதையெல்லாம் கருத்தில் கொண்ட ஆந்திர முதல்வர் ரோசய்யா, தெலுங்கானா போராட்டத்தால் ஆந்திரா பெரும் இழப்பைச் சந்தித்துக் கொண்டிருப்பதாக கவலையுடன் தெரிவித்தார், நிருபர்களிடம்.
மேலும் அவர் கூறுகையில், "ஹைதராபாத் என்ற சர்வதேச தரம் மிக்க தொழில் நகரத்தின் இமேஜே சுத்தமாக அடிவாங்கிவிட்டது.
தொடர்ந்து தங்கள் மீது தாக்குதல் நடந்ததால், எங்கிருந்து தெலுங்கு சினிமா ஹைதராபாத்துக்கு வந்ததோ, அதே இடத்துக்கு (சென்னைக்கு) சென்றுவிடும் நிலை உருவாகிவிட்டது. அவர்களைத் தடுக்கவும் வழியில்லை. தொழில் துறையிலும் இதே அறிகுறிகள் உள்ளன. தெலுங்கானா போராட்டக்காரர்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.." என்றார்.
Source:thatstamil.in
I am a Chennai-based freelance web site designer with over five years of Web design experience, offering high-end expertise at freelance prices. Before becoming a freelance web designer, I worked at various agencies and managed projects for different clients. My experience differs from most web designers, because my professional background is in Designing and Animation.
Friday, January 1, 2010
அதிவேக வாகனங்களை 'பிடிக்க' ரேடார்!
சென்னை: 2010ம் ஆண்டில் சென்னை [^] போக்குவரத்தை நவீனமாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். வேகமாக போகும் வாகனங்களைக் கண்டுபிடிக்க ரேடார்கள் வரவுள்ளன என்று சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ராஜேந்திரன் கூறினார்.
சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ராஜேந்திரன் செய்தி [^]யாளர்களிடம் கூறியதாவது:
சென்னை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பகுதியில் 60 லட்சம் பேர் வசிக்கின்றனர். 3.2 லட்சம் வாகனங்கள் உள்ளன.
2850 கி.மீ சாலையும், 44 கி.மீ கடற்பரை பகுதியும் உள்ளது. சென்ட்ரல் எழும்பூர் உள்பட 39 ரயில் நிலையங்களும் கோயம்பேடு பஸ் ஸ்டாண்டு உள்பட 53 பஸ் நிலையங்களும் உள்ளன.
இந்த ஆண்டு நவம்பர் வரை 1 லட்சத்து 26 ஆயிரத்து 158 வழக்குகள் பல்வேறு சட்டப் பிரிவுகளின்கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1123 பேர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். திருட்டு, கொள்ளை சம்பவங்களில் 75 சதவீதத்திற்கு மேல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
சாலை விபத்தில் இறந்தவர் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட குறைந்துள்ளது. போக்குவரத்தை சீரமைக்க கண்காணிப்பு கேமராக்கள் நிறுவியது உள்பட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
2010 ஆம் ஆண்டில் மேலும் 40 சந்திப்புகளில் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவுதல், புதிய தலைமை செயலகம் சுற்றி 26 சந்திப்புகளில் நவீன போக்குவரத்து முறையை அமல்படுத்துதல் மற்றும் வாகனங்களின் வேகத்தை கண்டுபிடிப்பதற்காக ரேடார்கள் வாங்குதல் போன்ற திட்டங்கள் உள்ளன.
கடன் அட்டை மோசடியை கட்டுப்படுத்தவும், மற்றும் கணினி வழி குற்றங்களை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டு உள்ளது என்று கூறினார்.
Source:thatstamil.in
சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ராஜேந்திரன் செய்தி [^]யாளர்களிடம் கூறியதாவது:
சென்னை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பகுதியில் 60 லட்சம் பேர் வசிக்கின்றனர். 3.2 லட்சம் வாகனங்கள் உள்ளன.
2850 கி.மீ சாலையும், 44 கி.மீ கடற்பரை பகுதியும் உள்ளது. சென்ட்ரல் எழும்பூர் உள்பட 39 ரயில் நிலையங்களும் கோயம்பேடு பஸ் ஸ்டாண்டு உள்பட 53 பஸ் நிலையங்களும் உள்ளன.
இந்த ஆண்டு நவம்பர் வரை 1 லட்சத்து 26 ஆயிரத்து 158 வழக்குகள் பல்வேறு சட்டப் பிரிவுகளின்கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1123 பேர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். திருட்டு, கொள்ளை சம்பவங்களில் 75 சதவீதத்திற்கு மேல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
சாலை விபத்தில் இறந்தவர் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட குறைந்துள்ளது. போக்குவரத்தை சீரமைக்க கண்காணிப்பு கேமராக்கள் நிறுவியது உள்பட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
2010 ஆம் ஆண்டில் மேலும் 40 சந்திப்புகளில் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவுதல், புதிய தலைமை செயலகம் சுற்றி 26 சந்திப்புகளில் நவீன போக்குவரத்து முறையை அமல்படுத்துதல் மற்றும் வாகனங்களின் வேகத்தை கண்டுபிடிப்பதற்காக ரேடார்கள் வாங்குதல் போன்ற திட்டங்கள் உள்ளன.
கடன் அட்டை மோசடியை கட்டுப்படுத்தவும், மற்றும் கணினி வழி குற்றங்களை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டு உள்ளது என்று கூறினார்.
Source:thatstamil.in
குறைந்து வரும் மலேசிய தமிழர்களின் எண்ணிக்கை
கோலாலம்பூர்: மலேசியா [^]வில் வாழும் இந்திய வம்சவாளியினரின் (பெரும்பாலும் தமிழர்கள்தான்) எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. இப்படியே போனால் எதிர்காலத்தில் மலேசியாவில் தமிழர்களின் எண்ணிக்கை அடியோடு காணாமல் போய் விடும் என்று கவலை தெரிவித்துள்ளார் மலேசிய இந்து சங்க துணைத் தலைவர் பாலதருமலிங்கம்.
இதுகுறித்து தமிழ்நேசன் இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், இப்போதெல்லாம் இந்தியர்கள் குறைந்த அளவிலான குழந்தைகளையே விரும்புகிறார்கள். அதிக குழந்தை பெற்றுக் கொள்வதை அவர்கள் விரும்புவதில்லை.
ஒன்று அல்லது 2 குழந்தைகளுக்கு மேல் அவர்கள் விரும்புவதில்லை. இந்த நிலை நீடித்தால் எதிர்காலத்தில் மலேசியாவில் இந்திய வம்சாவளியினர் பூண்டோடு அழிந்து போகும் வாய்ப்பு உள்ளது என்றார் பாலதருமலிங்கம்.
மலேசிய மக்கள் தொகையில், மூன்று முக்கிய இனப் பிரிவுகள்தான் மேலோங்கியுள்ளன. பெரும்பான்மைப் பிரிவாக மலாய் மக்கள் உள்ளனர். அடுத்த இடத்தில் சீனர்கள் (25 சதவீதம்) உள்ளனர். 3வது இடத்தில் வம்சாவளி இந்தியர்கள் உள்ளனர். இவர்களின் எண்ணிக்கை 8 சதவீதமாகும். இவர்களில் பெரும்பாலோனோர் தமிழர்களே.
Source:thatstamil.in
இதுகுறித்து தமிழ்நேசன் இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், இப்போதெல்லாம் இந்தியர்கள் குறைந்த அளவிலான குழந்தைகளையே விரும்புகிறார்கள். அதிக குழந்தை பெற்றுக் கொள்வதை அவர்கள் விரும்புவதில்லை.
ஒன்று அல்லது 2 குழந்தைகளுக்கு மேல் அவர்கள் விரும்புவதில்லை. இந்த நிலை நீடித்தால் எதிர்காலத்தில் மலேசியாவில் இந்திய வம்சாவளியினர் பூண்டோடு அழிந்து போகும் வாய்ப்பு உள்ளது என்றார் பாலதருமலிங்கம்.
மலேசிய மக்கள் தொகையில், மூன்று முக்கிய இனப் பிரிவுகள்தான் மேலோங்கியுள்ளன. பெரும்பான்மைப் பிரிவாக மலாய் மக்கள் உள்ளனர். அடுத்த இடத்தில் சீனர்கள் (25 சதவீதம்) உள்ளனர். 3வது இடத்தில் வம்சாவளி இந்தியர்கள் உள்ளனர். இவர்களின் எண்ணிக்கை 8 சதவீதமாகும். இவர்களில் பெரும்பாலோனோர் தமிழர்களே.
Source:thatstamil.in
பூமியை நோக்கி வரும் விண் கல்- தடுக்க முயலும் ரஷ்யா!
மாஸ்கோ: மிகப் பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி வந்து கொண்டுள்ளது. இதைத் தடுத்து பூமியைக் காப்பாற்ற ரஷ்யா முயற்சி மேற்கொண்டுள்ளது.
விண்வெளியில் விண்கற்கள் கோடிக்கணக்கில் சுற்றிக் கொண்டிருக்கின்றன. இவற்றில் எப்போதாவது சில புவயீர்ப்பு வளையத்திற்குள் வரும்போது பூமியை நோக்கி பாய்ந்து வரும். இந்தக் கற்கள் வரும் வேகத்திலேயே எரிந்து சாம்பலாகி விடும். சில பெரிய கற்கள் மட்டும் தப்பிப் பிழைத்து பூமியில் வந்து விழும்.
இவை விழுந்த இடத்தில் கல்லின் சைசுக்கேற்ப பள்ளம் ஏற்படுவது உண்டு. அந்த வகையில் தற்போது மிகப் பெரிய விண்கல் ஒன்று பூமியை நோக்கி வந்து கொண்டுள்ளது. இந்த விண்கல்லுக்கு அபோஃபிஸ் (Apophis) என்று பெயரிட்டுள்ளனர்.
அபோஃபிஸ் விண்கல், 2029ம் ஆண்டுவாக்கில் பூமியிலிருந்து 30,000 கிலோமீட்டர் தொலைவுக்கு நெருங்கி வரும். அதற்கு அடுத்த 7 ஆண்டுகளில் அதாவது 2036ம் ஆண்டு அது புவிவட்டப் பாதைக்குள் நுழைய வாய்ப்புள்ளதாம். இது நடந்தால் அந்தக் கல் பூமியின் மீது வந்து விழ வாய்ப்பு மிக அதிகம்.
அபோஃபிஸ் விண்கல்லின் சுற்றளவு 350 மீட்டர் அதாவது 1150 அடி என்று தோராயமாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கல் 1,000,000 டன் எடை கொண்டதாக இருக்கலாம் என்கிறார்கள்.
இது பூமியின் மீது விழுந்தால், அந்த இடத்தில் பிரான்ஸ் நாட்டின் சைசுக்கு மிகப் பெரிய பள்ளம் ஏற்படும். பல அணு குண்டுகள் ஒரே நேரத்தில் வெடித்தால் ஏற்பட்டால் ஏற்படும் அளவுக்கு மாபெரும் சேதம் ஏற்படும்.
இந்தக் கல் கடலில் விழுந்தால் நாம் இதுவரை கேள்விப்பட்டிராத அளவுக்கு சுனாமி அலைகள் ஏற்பட்டு மனித குலத்துக்கு பெரும் உயிர்ச் சேதம் ஏற்படும்.
எனவே இந்த விண் கல்லை பூமியில் விழாமல் தடுக்க அமெரிக்கா உள்ளிட்ட பெரிய நாடுகளுடன் இணைந்து ரஷ்ய விஞ்ஞானிகள் முயற்சிகளில் இறங்கியுள்ளனராம்.
விரைவில் இதுதொடர்பாக ரஷ்ய விஞ்ஞானிகளின் மிகப் பெரிய கூட்டம் கூடவுள்ளது. இதுகுறித்து ரஷ்ய விண்வெளிக் கழகத்தின் தலைவரான அனடோலி பெர்மினோவ் கூறுகையில், விரைவில் எங்களது கழகத்தின் கூட்டம் நடைபெறவுள்ளது. கல் பூமியின் மீது விழாமல் தடுக்க என்ன செய்யலாம் என்பது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது என்றார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், இந்தக் கல் பூமியின் மீது வந்து விழுந்தால் லட்சக்கணக்கான உயிர்கள் பலியாகும். பல ஆயிரக்கணக்கான ஊர்கள் சாம்பலாகி விடும்.
இது வந்து விழும் வரை காத்திருக்காமல், அதைத் தடுக்கும் வகையிலான பாதுகாப்பு நடைமுறைகளை சில கோடிகளை செலவழித்து மேற்கொள்வது நல்லது என நாங்கள் கருதுகிறோம். வரும் முன் காத்து்க கொள்ளும் அடிப்படையே இது.
விரைவில் அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய நாடுகள் ஆகியவற்றின் விண்வெளி நிபுணர்களுடன் இணைந்து ஒரு ஆய்வுக் கூட்டம் நடக்கவுள்ளது. பூமிக்கு ஏற்படவுள்ள இந்தப் பேரழிவை எப்படி சமாளிப்பது என்பது குறித்து இதில் ஆராயப்படும்.
இந்தக் கல் பூமியில் வந்து விழாமல் தடுக்கும் வகையில் ஒரு பிரமாண்ட ராக்கெட்டை அனுப்பி அதை சிதறடிப்பது அல்லது திசை திருப்புவது, அல்லது அந்தக் கல்லுக்குள் வெடி பொருட்களை புதைத்து வெடிக்கச் செய்வது என பல யோசனைகள் கூறப்படுகின்றன என்கிறார் அனடோலி.
இதுகுறித்து அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா கூறுகையில், இந்த விண்கல் பூமியின் மீது விழும்போது மிகப் பெரிய அளவுக்கு நாசம் ஏற்படும். எங்களுடைய கணக்குப்படி 2036ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி இந்த விண்கல் பூமியைத் தாக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன் பூமியை எரிகல் தாக்கினால் என்ற கற்பனையின் அடிப்படையில் Armageddon என்ற ஹாலிவுட் திரைப்படம் வெளியானது.
மைக்கேல் பே இயக்கிய அந்தப் படத்தில் பூமியைக் காக்க புரூஸ் வில்லிஸ் தலைமையில் ஒரு 'டிரில்லர்'கள் குழு எரிகல்லில் தரையிறங்கி அணு குண்டு வைத்து அதை இரண்டாக உடைத்து பூமி மீது மோதால் திசை திருப்பும்.
கிட்டத்தட்ட இந்தக் கதை உண்மையாகிவிடும் போலியிருக்கிறது!
Source:thatstamil.in
விண்வெளியில் விண்கற்கள் கோடிக்கணக்கில் சுற்றிக் கொண்டிருக்கின்றன. இவற்றில் எப்போதாவது சில புவயீர்ப்பு வளையத்திற்குள் வரும்போது பூமியை நோக்கி பாய்ந்து வரும். இந்தக் கற்கள் வரும் வேகத்திலேயே எரிந்து சாம்பலாகி விடும். சில பெரிய கற்கள் மட்டும் தப்பிப் பிழைத்து பூமியில் வந்து விழும்.
இவை விழுந்த இடத்தில் கல்லின் சைசுக்கேற்ப பள்ளம் ஏற்படுவது உண்டு. அந்த வகையில் தற்போது மிகப் பெரிய விண்கல் ஒன்று பூமியை நோக்கி வந்து கொண்டுள்ளது. இந்த விண்கல்லுக்கு அபோஃபிஸ் (Apophis) என்று பெயரிட்டுள்ளனர்.
அபோஃபிஸ் விண்கல், 2029ம் ஆண்டுவாக்கில் பூமியிலிருந்து 30,000 கிலோமீட்டர் தொலைவுக்கு நெருங்கி வரும். அதற்கு அடுத்த 7 ஆண்டுகளில் அதாவது 2036ம் ஆண்டு அது புவிவட்டப் பாதைக்குள் நுழைய வாய்ப்புள்ளதாம். இது நடந்தால் அந்தக் கல் பூமியின் மீது வந்து விழ வாய்ப்பு மிக அதிகம்.
அபோஃபிஸ் விண்கல்லின் சுற்றளவு 350 மீட்டர் அதாவது 1150 அடி என்று தோராயமாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கல் 1,000,000 டன் எடை கொண்டதாக இருக்கலாம் என்கிறார்கள்.
இது பூமியின் மீது விழுந்தால், அந்த இடத்தில் பிரான்ஸ் நாட்டின் சைசுக்கு மிகப் பெரிய பள்ளம் ஏற்படும். பல அணு குண்டுகள் ஒரே நேரத்தில் வெடித்தால் ஏற்பட்டால் ஏற்படும் அளவுக்கு மாபெரும் சேதம் ஏற்படும்.
இந்தக் கல் கடலில் விழுந்தால் நாம் இதுவரை கேள்விப்பட்டிராத அளவுக்கு சுனாமி அலைகள் ஏற்பட்டு மனித குலத்துக்கு பெரும் உயிர்ச் சேதம் ஏற்படும்.
எனவே இந்த விண் கல்லை பூமியில் விழாமல் தடுக்க அமெரிக்கா உள்ளிட்ட பெரிய நாடுகளுடன் இணைந்து ரஷ்ய விஞ்ஞானிகள் முயற்சிகளில் இறங்கியுள்ளனராம்.
விரைவில் இதுதொடர்பாக ரஷ்ய விஞ்ஞானிகளின் மிகப் பெரிய கூட்டம் கூடவுள்ளது. இதுகுறித்து ரஷ்ய விண்வெளிக் கழகத்தின் தலைவரான அனடோலி பெர்மினோவ் கூறுகையில், விரைவில் எங்களது கழகத்தின் கூட்டம் நடைபெறவுள்ளது. கல் பூமியின் மீது விழாமல் தடுக்க என்ன செய்யலாம் என்பது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது என்றார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், இந்தக் கல் பூமியின் மீது வந்து விழுந்தால் லட்சக்கணக்கான உயிர்கள் பலியாகும். பல ஆயிரக்கணக்கான ஊர்கள் சாம்பலாகி விடும்.
இது வந்து விழும் வரை காத்திருக்காமல், அதைத் தடுக்கும் வகையிலான பாதுகாப்பு நடைமுறைகளை சில கோடிகளை செலவழித்து மேற்கொள்வது நல்லது என நாங்கள் கருதுகிறோம். வரும் முன் காத்து்க கொள்ளும் அடிப்படையே இது.
விரைவில் அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய நாடுகள் ஆகியவற்றின் விண்வெளி நிபுணர்களுடன் இணைந்து ஒரு ஆய்வுக் கூட்டம் நடக்கவுள்ளது. பூமிக்கு ஏற்படவுள்ள இந்தப் பேரழிவை எப்படி சமாளிப்பது என்பது குறித்து இதில் ஆராயப்படும்.
இந்தக் கல் பூமியில் வந்து விழாமல் தடுக்கும் வகையில் ஒரு பிரமாண்ட ராக்கெட்டை அனுப்பி அதை சிதறடிப்பது அல்லது திசை திருப்புவது, அல்லது அந்தக் கல்லுக்குள் வெடி பொருட்களை புதைத்து வெடிக்கச் செய்வது என பல யோசனைகள் கூறப்படுகின்றன என்கிறார் அனடோலி.
இதுகுறித்து அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா கூறுகையில், இந்த விண்கல் பூமியின் மீது விழும்போது மிகப் பெரிய அளவுக்கு நாசம் ஏற்படும். எங்களுடைய கணக்குப்படி 2036ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி இந்த விண்கல் பூமியைத் தாக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன் பூமியை எரிகல் தாக்கினால் என்ற கற்பனையின் அடிப்படையில் Armageddon என்ற ஹாலிவுட் திரைப்படம் வெளியானது.
மைக்கேல் பே இயக்கிய அந்தப் படத்தில் பூமியைக் காக்க புரூஸ் வில்லிஸ் தலைமையில் ஒரு 'டிரில்லர்'கள் குழு எரிகல்லில் தரையிறங்கி அணு குண்டு வைத்து அதை இரண்டாக உடைத்து பூமி மீது மோதால் திசை திருப்பும்.
கிட்டத்தட்ட இந்தக் கதை உண்மையாகிவிடும் போலியிருக்கிறது!
Source:thatstamil.in
Subscribe to:
Posts (Atom)