Wednesday, March 16, 2011

முன்னாள் அமைச்சர் ராசாவின் நண்பர் சாதீக் பாட்சா தற்கொலை?

வரும் 31ந்திகதி ஸ்பெக்ட்ரம் 2ஜி ஊழல் வழக்கில் சிக்கிய முன்னாள் அமைச்சர் அ.ராசாவின் மீதான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கபட்டிருக்கும் நிலையில், இன்று ராசாவின் மிக நெருங்கிய நண்பரும், சிபிஜயின் விசாரணை வளையத்துக்குள் இருந்தவருமான சாதிக் பாட்சா தற்கொலை செய்து கொண்டுள்ளதாகச்

சென்னைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கிரீன் ஹவுஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்து வந்த இவருடைய இந்த திடீர் தற்கொலை விவகாரம் இந்த ஊழல் வழக்கில் மேலும் பலத்த சந்தேகங்களையும், சிக்கல்களையும் உருவாக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் இன்று பிற்பகல் தூக்குப் போட்டுக் கொண்ட சாதீக்பாட்சாவினை மீட்டு, அப்போலோ வைத்தியசாலைக்கு உறவினர்கள் கொண்டு சென்ற போது, அவர் இறந்து விட்டதா வைத்தியர்கள் தெரஜிவித்தாக முதற் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ராசா மீதான குற்றப்பத்திரிகைத் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட சில மணிநேரங்களில் இத் தற்கொலை நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Source:4tamilmedia

No comments:

Post a Comment